சிவபெருமான் திருவடியை நினைத்து, நினைந்து உணர்ந்து, உணர்ந்து நெகிழ்ந்து, நெகிழ்ந்து திருவாசகத்தை ஓதினால் சிவமாம் வெற்றி நமக்குக்கிடைக்கும்.
மாணிக்கவாசகருடைய பெருமையை மதுரையை ஆட்சி புரிந்த அரிமர்த்தன பாண்டியன் அறிந்தான். உரிய மரியாதையோடு அவரை தனது அரசவைக்கு அழைத்து வந்தான்.
“பெருமானே, தாங்கள் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டிற்கும் நகரத்திற்கும் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான். பதவியை விரும்பாத மாணிக்கவாசகர் மூன்று வேளையும் அங்கயற்கண்ணி அம்மையாரையும் ஆலவாயண்ணலையும் சேவிக்க இது பயனாக இருக்கும். பதவியில் இருந்தால் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
“பெருமானே, தாங்கள் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டிற்கும் நகரத்திற்கும் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான். பதவியை விரும்பாத மாணிக்கவாசகர் மூன்று வேளையும் அங்கயற்கண்ணி அம்மையாரையும் ஆலவாயண்ணலையும் சேவிக்க இது பயனாக இருக்கும். பதவியில் இருந்தால் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.